Monday, October 1, 2018

தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி ..! மும்பையில் இருந்து வந்த தகவலால் உஷாரான போலீஸ்..!

தமிழகத்தில் ஓய்ந்திருந்த வங்கிக் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் பேங்க் ஆப் பரோடாவில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. 

2015-ம் ஆண்டு, ஜூன் 23-ம் தேதி நள்ளிரவில், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த வட மாநிலக் கொள்ளையர்கள், வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த சுமார் 5 ஆயிரம் சவரன் நகைகளை கொள்ளையடித்துத் தப்பிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் வங்கிக் கொள்ளைகளும், கொள்ளை முயற்சிகளும் தலைதூக்கியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் இயந்திரத்தால் துண்டித்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர்.

அதேபோல, கடந்த சில மாதங்களில் சென்னை இந்திரா நகர் இந்தியன் வங்கியிலும் கொள்ளைச் சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றினர்.

கடந்த ஜூலை 29-ம் தேதி, சென்னை ஆவடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டியிருந்தது  வெளிச்சத்துக்கு வந்தது. 

அதற்கு ஒரு நாள் முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரிலும் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியிருந்தது.

மதுரை விளக்குத் தூண் காவல் நிலையத்துக்குட்பட்ட இந்தியன் வங்கியில் கடந்த மார்ச்சில் புகுந்த கொள்ளையர்கள், கொள்ளையடிக்கச் சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.

அடுத்தடுத்து நடைபெற்று வரும் வங்கிக் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை முயற்சிகளில், வங்கி அலாரங்களும், சிசிடிவி காட்சிகளும் துப்புதுலக்குவதில் பேரூதவியாக இருந்து வருகின்றன என்பது கண்கூடு.

இதனை உணர்ந்து, அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்திட காவல் துறையும், வங்கித் துறையும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.

Classic Right sidebar தமிழகம், வங்கிக் கொள்ளை, ஏடிஎம் கொள்ளை, Tamil Nadu, Bank Robbery, CCTV Footage, Atm theft தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NdpNl2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment