மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படி கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி அறிவுறுத்தலின்படி, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணி பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 88 அங்காடிகள் மூலமாக கதர் ஆடைகள் மற்றும் துணி விற்பனை செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகளை அனைவரும் பயன்படுத்திட வேண்டுமென முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Classic Right sidebar Mahatma Gandhi, Gandhi Jayanthi, காந்தி, மகாத்மா காந்தி, பழனிசாமி, Palaniswami தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Op4pxT
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment