Tuesday, October 2, 2018

முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் - விஜய் அதிரடி

தமிழக முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன், லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்று நடிகர் விஜய் பேசியிருப்பதால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 

சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் படத்தில் அரசியல் கொஞ்சம் இருந்தது, ஆனால்  சர்க்கார் படத்தில அரசியல மெர்சல் பண்ணிருக்கோம் என்று  கதையை எடுத்துரைத்தார்.  

வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் உழைக்கணும், ஆனால் ஒரு சிலர்,  வெற்றியடையக் கூடாதுனு உழைக்குறாங்க என்று ஆதங்கத்தை தெரிவித்த நடிகர் விஜய்,  `உசுப்பேத்துருவங்ககிட்ட உம்முனு இருந்துட்டு , கடுப்பேத்துருவங்ககிட்ட கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசினார்.

இதைத் தான் தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் என்றும். இத நீங்களும் பின்பற்றுங்க என்றும் ரசிகர்களை விஜய் கேட்டுக்கொண்டார். சர்கார ஆரம்பிச்சுட்டு தேர்தல்ல நிக்குறோம், எல்லோரும் படத்துக்கு ஓட்டு போடுங்க'' என்று அரசியல் சரவெடி கொளுத்திப்போட்ட விஜய், சர்க்கார்  படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை என்று விளக்கமளித்தார். 

நிஜத்தில்  முதலமைச்சரானால்  முதல்வராக நடிக்க மாட்டேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய விஜய், முதலமைச்சரானால், லஞ்சம் ஊழலை முதலில் ஒழிப்பேன் என்று பேசி விறுவிறுப்பை ஏற்படுத்தினார். 

ஒரு மாநிலத்தில் தலைவன் நல்லா இருந்தா ஒரு மாநிலமும் தானாகவே நல்லா இருக்கும் என்று தமது ஆதங்கத்தை தெரிவித்த விஜய்,  இங்கு பிறப்பு சான்றிதழ் வாங்குவது முதல் இறப்பு சான்றிதழ் வாங்கும் வரை  எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுகிறது என்று லஞ்சம் தலைவிரித்தாடுவதை கடுமையாக  விமர்சித்தார்.

 

Classic Right sidebar Vijay, Politics, Sarkar, விஜய், சர்கார், அரசியல் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OvbBsd
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment