Tuesday, October 2, 2018

காசியாக மாறிய திருச்சி...! இறந்த தாயின் உடல் மீது ஏறி இறுதி சடங்கு நடத்திய அகோரி மகன்

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே, இறந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி ஒருவர் பூஜை நடத்தி அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியமங்கலத்தை பூர்வீகமாக கொண்ட மணிகண்டன் என்பவர், வாரணாசி சென்று பயிற்சி பெற்றுவந்துள்ளதாக கூறி அண்மையில் ஜெய்அகோர காளி என்ற பெயரில் சிலையுடன் கோயில் நிறுவி நடத்திவருகிறார். அப்போது, நள்ளிரவில் உடுக்கை இசையுடன் நள்ளிரவில் செய்த யாகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் அகோரிகளின் உடுக்கை அடியுடன் நடக்கும் இரவாட்ட கூச்சல் அகோரிகளின் இருப்பை ஆழமாக பதிவு செய்து வருகிறது. இந்நிலையில்தான், தலைமை அகோரி மணிகண்டனின் தாய் மேரி உயிரிழந்துள்ளார். வழக்கமாக அடக்கம் செய்யும் முறையை விடுத்து, இடுகாட்டிற்கு உடலை கொண்டு சென்ற அகோரிகள், பிணத்தின் மீது அமர்ந்து பூஜை செய்தனர். 

தமிழகத்திலேயே இதுவரை இல்லாத இந்த செயல்பாடு, உறவினர்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிரச் செய்தது. அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு ஒலிக்க அகோரி பூஜை நடந்தது. இதையடுத்து, தாயாரின் உடலுக்கு தீபாராதனை காட்டி அடக்கம் செய்யப்பட்டது.  இடுகாட்டில் நடந்த அகோரிகளின் விசித்திர பூஜையால் அப்பகுதியினர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. காசியில் நடக்கும் அகோரிகளின் செயல்பாடுகளே அறிவுக்கு பொருந்தாத நிலையில், அதுபோன்றதொரு நிகழ்வு தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி அடுத்த அரியமங்கலத்தில் நடைபெற்றுள்ளது வியப்பும், விசித்திரமும்......

Classic Right sidebar திருச்சி, அகோரி தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IxTRH3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment