Monday, October 1, 2018

தமிழக அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த திமுக-வுக்கு அனுமதி மறுப்பு

பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. 

கலெக்ஷன், கரப்சன், கமிஷன் என்ற தலைப்பில் அரசுக்கு எதிராக அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 81 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க கொடுத்துள்ள மனு மீது காவல்துறை எந்த பதிலும் கொடுக்கவில்லை என கூறப்பட்டது. 

இதனை கேட்ட நீதிபதி காவல்துறை விளக்கம் கொடுக்காத நிலையில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது என்றார். மேலும், 3 ஆம் தேதி காவல்துறை பதிலளிக்க அறிவுறுத்திய நீதிபதி மகாதேவன், வழக்கு விசாரணையை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Classic Right sidebar DMK, Stalin, Meeting, Tamilnadu, திமுக, பொதுக்கூட்டம், ஸ்டாலின், அதிமுக அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zHj2nL
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment