ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக புதிய பொது நல மனுவை வழக்கறிஞர் வினீத் தாண்டா என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் என்பவரும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு தடை விதிக்கக் கோரி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து வழக்குகளும் நாளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் முன் விசாரணைக்கு வருகிறது.
Classic Right sidebar ரஃபேல் விமான ஒப்பந்தம், வழக்கு, பாஜக, மோடி, Rafale Deal, Modi, case, investigation, இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yguyWr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment