திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டை சேர்ந்த 8 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் ஊரக காவல் நிலையத்திற்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் கடந்த 6ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் இப்ராஹிம் என்பதும் அவர் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், முறையான ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணியிற்றி வருவதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருடன் செவந்தாம்பாளையம் பகுதியில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Classic Right sidebar திருப்பூர், வங்கதேசம், Tiruppur, bangladesh தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NDk2xi
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment