Tuesday, October 2, 2018

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாட மறுத்தரா நடிகர் விஜய்?

நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ளது சர்கார் படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், நடிகர்கள் ராதாரவி, யோகிபாபு, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்  உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய நடிகர் விஜயின் பேச்சு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது. அரசியல், சமூகம், அட்வைஸ் என தனது பேச்சை மெர்சலாக தெறிக்கவிட்டுள்ளார் விஜய். 

இறுதியாக, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து நடிகர் விஜய் பேசியதாவது:-

“நீங்க ரொம்ப இனிமையானவர். சர்கார் படத்தில் ஒரு பாடல் பாட என்னை அழைத்தார். ஆனால், தான் அதை வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தன்னால் அந்த பாடல் கெட்டுவிட வேண்டாம் என்று பாடலை பாட மறுத்துவிட்டேன். ஆனால், அவர் கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோஷம்” எனக் கூறி ரஹ்மானுக்கு நன்றியும் தெரிவித்தார் நடிகர் விஜய்.

 

Classic Right sidebar Sarkar, actor vijay, AR Rahman, AR Murugadoss, Sarkar Audio Launch சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yakAVx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment