Monday, October 1, 2018

எச்சரிக்கை..! வரும் 6ம் தேதி தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்பு

வரும் 6ம் தேதி தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழக கேரள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. புயல் காரணமாக, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்குகனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அடுத்த 48 மணி நேரத்திற்கு புயல் காற்று வீசும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மேலும், ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Classic Right sidebar Tamil Nadu, Weather Alert, MET India, Chennai, Chennai Rains, சென்னை, கனமழை, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புயல் எச்சரிக்கை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zIvZh6
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment