Tuesday, October 2, 2018

திருவண்ணாமலையில் கந்து வட்டி கொடுமையால் கடத்தப்பட்ட 3 பேர் மீட்பு

திருவண்ணாமலையில் கந்து வட்டி கொடுமையால் கடத்திச்செல்லப்பட்ட 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

திருவண்ணாமலையில் பாரதி என்பவர் அதே பகுதியை சார்ந்த மணி என்பவரிடம்  15,000 ரூபாய் கடனாக பெற்ற நிலையில், மூன்று மாதங்களில்  கந்து வட்டி கணக்கிட்டு 70,000 ரூபாய் செலுத்தியுள்ளார். 

ஆனால், கடன் கொடுத்த மணி, மேலும்  பணம் செலுத்த வேண்டும் என்று பாரதியை கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பாரதி பணம் செலுத்தாததால், பாரதியின் தாயார் குப்பு, பாரதியின் மனைவி மற்றும் 3 மாத குழந்தை ஆகியோரை மணி கடத்திச் சென்றுள்ளார். 

மேலும், பணத்தை செலுத்திவிட்டு 3 பேரையும்  அழைத்துக்கொண்டு செல் என்று மணி பாரதியிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,   கடத்திச்செல்லப்பட்ட 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், கந்துவட்டி புகாரில் மணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Classic Right sidebar திருவண்ணாமலை, கந்து வட்டி, கடத்தல், Thiruvannamalai, Kidnap தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xVsORW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment