Thursday, October 4, 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகம் மற்றும் இலங்கை அருகே நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 3 தினங்களை பொறுத்தவரையில் மீதமான மழையும் ஓரிரு முறை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் அக்டோபர் 5 -ம் தேதி காற்றத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அந்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பிறகு புயலாக மாறி ஓமன் வழியே நகரகூடும் என்பதால் மீனவர்கள் வரும் 5 -ம் தேதி முதல் 8 -ம் தேதி வரையில் தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவி, குமரி கடல் பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் அக்டோபர் 5 -ம் தேதிக்குள் கரைக்கு திரும்பிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் குள்ளம்பாடி 11 செ.மீ மழையும், திருசெந்துர் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனத் தெரிவித்துள்ளார். 

Classic Right sidebar சென்னை, இடி, கனமழை, வாகனஓட்டிகள், இந்தியவானிலை, தமிழகம், கேரளா, வானிலை, chennaimeteorologicalcentre, ChennaiRains, Weather, WeatherUpdate, Rain, MeteorologicalCentre, traffic, Chennai, tnrain தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RoPimw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment