Monday, October 1, 2018

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கையெழுத்தானது ஒப்பந்தம்..!

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் காவிரி டெல்டா பகுதியில் 2 இடங்களிலும், ஓ.என்.ஜி.சி நிறுவனம் 1 இடத்திலும் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெண்டர் எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 3 இடங்களில்  ஹைட்ரோகார்பன் எடுப்பது உறுதியாகி உள்ளது.

குறிப்பாக, சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனமும், நாகையில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி, மக்களின் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே தற்போது மீண்டும் தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Classic Right sidebar தமிழகம், Tamilnadu, Vedanta, வேதாந்தா, காவிரி டெல்டா பகுதி, HydroCarbon, ONGC, ஓ.என்.ஜி.சி, Dharmendra Pradhan தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IvGpn2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment