Tuesday, October 2, 2018

இயக்குனர் மணிரத்தினம் படத்தில் சர்ச்சை வசனம்... மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை அபிராமிபுரத்தில் உள்ள திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி வழியாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதில், செக்க சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார்.

 இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் அபிராமிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொலை பேசியில் மிரட்டல் விடுத்த பாஸ்கரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Classic Right sidebar மணிரத்னம், செக்க சிவந்த வானம், சினிமா, maniratnam, CCV, Cinema சினிமா மணிரத்னம், செக்க சிவந்த வானம், சினிமா, Maniratnam, CCV, Cinema 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NhoRMe
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment