தேனியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஒன்றுக்கு மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணையில் மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தாயாருக்கு கருணைத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nmpoga
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment