Wednesday, October 10, 2018

வேலூரில் இருவரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் மீது கணவன் புகார்

வேலூரில் இருவரை திருமணம் செய்து ஏமாற்றியதாக 18 வயது இளம் பெண் மீது முதல் கணவர் புகார் அளித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்த சமிதா என்பவரை, சாலை நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்தார். திருமணத்தின் போது இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், இதனை காரணம் காட்டி, சில தினங்களிலேயே சமிதா கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவியை சமரசம் செய்து தனது வீட்டிற்கு சக்திவேல் அழைத்தபோது, அவருடன் வர சமிதா மறுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், தனது மனைவி வேறொரு இளைஞருடன் செல்வதைப் பார்த்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்ததால் சக்திவேல் அதிர்ச்சியடைந்தார்.  தன்னை விவாகரத்து செய்யாமல், தனது பள்ளிப் பருவக் காதலனை 2-வது திருமணம் செய்து கொண்டது தெரியவந்ததையடுத்து, சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IOo3Ov
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment