நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றியது பாரதிய ஜனதா அரசு என பிரதமர் நரேந்திரமோடி நமோ ஆப் மூலம் கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திரமோடி, ராய்ப்பூர், மைசூர், தோல்பூர், ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே நமோ ஆப் மூலம் உரையாற்றினார். அப்போது, நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த திட்டங்களை பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றியதாகவும், முந்தைய அரசு, இந்தியாவின் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்காமல், அவப்பெயரை ஏற்படுத்தியது வருத்தத்திற்குரிய செயல் என்றும் தெரிவித்தார்.
மெகா கூட்டணி அமைப்பது என்பது ஒரு தோல்வியடைந்த திட்டம் என்றும், ஆட்சியமைக்கவேண்டும் என்பதற்காக, சில கட்சிகள் அர்ப்பமான வகையில் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்கவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Classic Right sidebar பிரதமர் மோடி, நமோ ஆப், Narendra modi, NaMo App இந்தியாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CByfJZ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment