Wednesday, October 10, 2018

தமிழகத்தின் முதல் அடுக்குமாடி பேருந்து நிலையம் -  திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை மாதவரத்தில் அமைக்கப்பட்ட அடுக்குமாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

ஒரே நேரத்தில் 42 பேருந்துகள் இயக்கும் வண்ணம் நவீன முறையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேல்தளத்தில் 48 பேருந்துகள் நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. திருப்பதி, நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்மூலம் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்படுகிறது.

 

Classic Right sidebar சென்னை, அடுக்குமாடி, முதலமைச்சர் பழனிசாமி, காணொளி காட்சி தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OeSuDn
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment