Wednesday, October 10, 2018

ரஃபேல் ஒப்பந்த விவரங்களை தாக்கல்  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரபேல்போர்  விமான ஒப்பந்தம் தொடர்பான முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன், ஒப்பந்தம் பற்றி தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

ரபேல் ஒப்பந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தேர்தல் யுக்தியாக கையாள்வதாக மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ரபேல் ஒப்பந்தம் எதன் அடிப்படையில் கையெழுத்தானது, கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்கு என்ன காரணம், யாருடைய வழிகாட்டுதலின் படி ஒப்பந்தம் போடப்பட்டது என்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

Classic Right sidebar ரபேல்போர், விமான ஒப்பந்தம், அறிக்கை இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PrkKPE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment