Monday, October 1, 2018

கால்பந்து வீரர் ரொனால்டோ மீது அமெரிக்க பெண் பாலியல் புகார்

பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க பெண் கூறிய புகாரை, பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மறுத்துள்ளார்.

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான ரொனால்டோ, 2009-ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் க்ளப்புக்காக விளையாடி வந்தார். கடந்த சில மாதங்களுக்குமுன், இத்தாலியின் பிரபல க்ளப்பான ஜூவாண்டஸ் அணியில் இணைந்தார்.

இந்நிலையில், ரொனால்டோ மீது காத்ரின் மயோர்கா என்ற 34-வயது அமெரிக்க பெண் பாலியல் புகார் கூறியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் ரொனால்டோ, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுபற்றி வெளியே சொல்லாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் என்று கூறியுள்ளார்.

ஜெர்மனி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதை கூறி பரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Classic Right sidebar கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுக்கல், Christiana Ronaldo, Portugal, காத்ரின் மயோர்கா, Kathryn Mayorga, Rape Allegations விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P5iX2R
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment