Tuesday, October 9, 2018

மியான்மரில் இருந்து சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல் 

சென்னையில் அரிய வகை உயிரினங்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அரிய வகை வெளிநாட்டு பறவைகளும், அபூர்வமான விலங்குகளும் மியான்மர் வழியாக கடத்தி வரப்பட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, சென்னை புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.  

சோதனையில் அரிய வகை பறவை இனங்கள், பஞ்சவர்ணக் கிளி, கொண்டைக் கிளி, நீல மஞ்சள் கிளி, சிவப்பு பேராந்தி, அணில் குரங்கு உள்ளிட்ட விலங்கினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A0mwBX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment