Monday, October 1, 2018

போட்டியில் தோல்வி அடைந்ததால் இத்தாலி வீரர் வெறிச்செயல் 

சீனாவில் நடைபெற்ற டென்னிஸ் இறுதிப்போட்டியின்போது, தோல்வி அடைந்த ஆத்திரத்தில் இத்தாலி வீரர் ஃபேபியோ (Fabio), தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் நடைபெற்ற செங்டு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டொமிக் (Bernard Tomic), இத்தாலியின் ஃபேபியோவை (Fabio) வீழ்த்தி கோப்பை தட்டிச் சென்றார். போட்டியின்போது, புள்ளிகளை தவறவிட்ட ஆத்திரத்தில் இத்தாலி வீரர் ஃபேபியோ (Fabio), தனது டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். அத்துடன், டென்னிஸ் ராக்கெட்டை மேலே தூக்கி எறிந்து காலால் உதைத்தார். 

இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நடத்தை விதிகளை மீறியதால் இவர்மீது டென்னிஸ் சம்மேளனத்தின் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.
 

Classic Right sidebar விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xOFvyb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment