Thursday, October 4, 2018

விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' படத்திற்கு பிரச்சனை

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி தணிக்கை குழு முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வர் ரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். 

அதில் “ஓட்டுபோட விரும்பாத வாக்காளர்கள் தங்கள் வாக்கை நோட்டாவில் பதிவு செய்யலாம் என்பது வழக்கம். நோட்டா படம் வேட்பாளர்களை தேர்வு செய்ய விரும்பாதவர்கள் செயலை ஊக்குவிப்பதுபோல் உள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எல்லோரும் நோட்டாவில் வாக்கை பதிவு செய்தால் தேர்தல் குழப்பமாகி விடும். தெலுங்கானாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த படத்தை பார்த்தால் நோட்டாவில் வாக்குப்பதிவு செய்வார்கள். போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் படத்தை பார்த்த பிறகே திரையிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளை வெளியாகவுள்ள நோட்டா படம் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் திரைக்கு வருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Classic Right sidebar விஜய்தேவரகொண்டா, நோட்டா, பிரச்சனை, ஓட்டு, NOTA சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ICAXz8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment