விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் வாய் சவடால் விடுகின்றனர் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் விஜய்யின் சர்கார் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று(03-10-2018) பிரம்மண்டமாக நடைப்பெற்றது. இந்த இசை வெளியீட்டின் போது பேசிய நடிகர் விஜய் பல அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமியை சூசகமாக விமர்சனம் செய்வது போல் மன்னர் எவ்வழியோ அமைச்சர்களும் அந்த வழிதான், தலைமை சரியாக இருந்தால் போதும் எந்தவித ஊழலும் நடைபெறாது என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.
மேலும் நான் சர்கார் படத்தில் முதலமைச்சராக நடிக்கவில்லை, ஆனால் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக பேசினார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான மேடையாக சர்கார் இசை வெளியீடு இருந்தது என்றே சொல்லாம்.
நடிகர் விஜய்யின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஜீவாதார பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல், ஏசியில் இருந்துகொண்டு படம் ரிலீசாகும் நேரத்தில் மட்டும் விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் வாய் சவடால் விடுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
Classic Right sidebar விஜய், தமிமுன் அன்சாரி, ரஜினிகாந்த், Rajinikanth, Vijay, Tamim Munansari அரசியல் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2E2blNw
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment