புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கழிவுநீர் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட தூய்மையே சேவை திட்டம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வாய்க்கால்களும் தூர் வாரப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக நெல்லித்தோப்பு பகுதியில் துப்புரவு பணியை முதலமைச்சர் நாராயணசாமி தொங்கி வைத்தார். அப்போது அங்கிருந்த கழிவுநீர் சாக்கடைகளில் ஏற்பட்டிருந்த அடைப்பை கண்ட அவர், தாமாக முன்வந்து சாக்கடை வாய்காலில் இறங்கி தூர்வாரும் பணியை மேற்கொண்டார்.
கழிவுநீர் சாக்கடையில் முதலமைச்சர் நாராயணசாமி தாமாக முன்வந்த சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Classic Right sidebar பிரதமர் மோடி, Narendra modi, புதுச்சேரி, Puducherry, தூய்மையே சேவை, முதலமைச்சர் நாராயணசாமி, narayanasamy, SwachhataHiSeva இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2On4PES
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment