புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி படித்துறையில் புனித நீராட விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என நெல்லை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் அக்டோபர் 12 முதல் 23ம் தேதி வரை புஷ்கரம் விழா நடத்தப்பட உள்ளது. இதை ஒட்டி, நெல்லையில் உள்ள தைபூசப் படித்துறை, குறுக்குத்துறை ஆகிய இடங்களில் புனித நீராட தடை விதித்து இந்து சமய அறநிலைய துறையும், மாவட்ட ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும்,சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டுமே அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படித்துறை பகுதியில் அனுமதித்தால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் படித்துறையில் விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வரும் 8ம் தேதிக்கு இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Classic Right sidebar தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yd2L8q
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment