Wednesday, October 3, 2018

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இன்று  இந்தியா வருகிறார்.

இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்த முறை இந்தியாவுக்கு வருகிறார். டெல்லிக்கு வரும் அவருக்கு மத்திய அரசு சார்பில் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரையும் விளாடிமிர் புதின் தனித்தனியாக சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இன்றும் நாளையும்  டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள விளாடிமிர் புதின்,முக்கிய நிகழ்ச்சியாக இந்தியா-ரஷ்யா 19 ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

அவரது இந்தப் பயணத்தின்போது, ரூ.36,000 கோடி செலவில் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar India, russia, Vladimir Putin, ரஷ்ய அதிபர் புதின் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y0wtxW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment