Wednesday, October 3, 2018

ரஜினிக்கு மட்டுமே செல்வாக்கு உள்ளது - நடிகர் விஜய் பேச்சு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். மேலும், ரஜினி மட்டுமே மக்களிடம் செல்வாக்கு மிகுந்த நடிகராக உள்ளார் என்று தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேச காங்கிரஸ், திமுக-வுக்கு அறுகதை இல்லை என்றும், மக்களை அச்சுறுத்தும் அரசியலில் இருந்து திமுக, காங்கிரஸ் விடுதலை பெற வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் முதலமைச்சராக ஆசைப்படுவது தவறில்லை என்றும் ஆனால் மக்கள் தான் முடிவு செய்வார்கள் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு ஒவ்வொரு நடிகர்களாக வருவது நல்லது என கூறினார்.

Classic Right sidebar அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QthdAr
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment