Tuesday, October 2, 2018

ரன்வீர் ஷா-வுக்கு சொந்தமான இடங்களிலிருந்து 80 சிலைகள் பறிமுதல்

ரன்வீர் ஷா-வுக்கு சொந்தமான மேலும் 2 இடங்களில் சோதனை நடத்திய சிலை தடுப்பு பிரிவினர்,  80 க்கும் மேற்பட்ட சிலைகளை கைப்பற்றியுள்ளனர்.

பிரபல தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 27 ஆம் தேதி சோதனை நடத்திய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் 91 சிலைகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான சென்னையை அடுத்த படப்பை மற்றும் மேல்மருத்துவத்தூர் அருகே உள்ள ராமாவரம் உள்ளிட்ட இடங்களில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதில் 80 க்கும் மேற்பட்ட சிலைகளை கைப்பற்றிய அவர்கள், ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் மேலும் பல தொன்மையான சிலைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Classic Right sidebar ரன்வீர் ஷா, சிலை கடத்தல், Statue Smuggling, Ranvir Shah தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ov5EeW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment