Wednesday, September 16, 2020

வரதட்சணை கொடுமை சட்டம் : குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 304B-ல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். மேலும் பிரிவு 372ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373ல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு விலைக்கு வாங்குவோருக்கு வழங்கப்படும் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

The post வரதட்சணை கொடுமை சட்டம் : குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3iAXlKc
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment