Friday, July 26, 2019

கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்

சென்னை: கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோரின் வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த மூவருக்கும் திருநெல்வேலி நீதிமன்றம் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Mf39vD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment