Tuesday, October 2, 2018

புதுச்சேரியில் அரசு விழா மேடையிலேயே அதிமுக MLA - ஆளுநர் கிரண்பேடி இடையே வாக்குவாதம்

புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், ஆளுநர் கிரண்பேடியும் அரசு விழாவில் மேடையிலேயே சண்டையிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. 

புதுச்சேரி மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்கும் விழா புஸ்ஸி வீதியில் நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உள்ளாட்சித்துறை  அமைச்சர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, வாழ்த்துரை வழங்கி பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தனக்கு விழா அழைப்பிதழில்  உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், தனது தொகுதிக்கு உரிய திட்டங்கள் நிறைவேற்ற அரசு உதவ வில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அப்போது ஆளுநருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் விழாவை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிக்கொண்டனர்.

Classic Right sidebar புதுச்சேரி, Puducherry, Kiran bedi, கிரண் பேடி, அதிமுக, ADMK இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RiD9PZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment