Tuesday, October 2, 2018

சென்னை வந்தடைந்த வியட்நாம் கடலோர காவல் படை கப்பல்

வியட்நாம் கடலோர காவல் படையைச் சேர்ந்த சி.எஸ்.பி. 8001 கப்பல் இன்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

இந்திய கடலோர காவல்படையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக வியட்நாமைச் சேர்ந்த சி.எஸ்.பி. 8001 கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

அந்த கப்பலுக்கு இந்திய கடலோர காவல் படையினரும், பள்ளி மாணவ, மாணவிகளும் சிறப்பான வரவேற்பளித்தனர். வரும் 4ம் தேதி நடைபெற உள்ள கூட்டுப்பயிற்சியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஷவுரியா கப்பல் பங்கேற்கிறது.

Classic Right sidebar Chennai, Vietnam, சென்னை, வியட்நாம், சென்னை துறைமுகம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zKbqAX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment