Thursday, October 4, 2018

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழையில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar வடகிழக்கு, பருவமழை, முதலமைச்சர், பழனிசாமி, ஆலோசனை, EDAPPADIPALANISAMI . edappadi இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IDDU2e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment