Monday, October 8, 2018

அமெரிக்காவை சேர்ந்த இருவர்க்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

இந்தாண்டிற்கான, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டவ்ஸ்  (Nordhaus ) மற்றும் பால் ரோமர் (Paul) உள்ளிட்ட இரண்டு விஞ்ஞானிகள் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற  தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பருவகால மாற்றத்துடன் பொருளாதாரத்தை தொடர்புபடுத்திய ஆய்விற்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது என விருதுக்குழு தெரிவித்தது. பொருளாதாரத்திற்கான பரிசுடன் இந்தாண்டிற்கான அனைத்து நோபல் பரிசு குறித்த அறிவிப்புகளும் நிறைவடைந்துள்ளன. 

இந்தாண்டிற்கான நோபல் பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரெட் நோபலின் நினைவுதினத்தன்று நடைபெறவுள்ளது.

Classic Right sidebar உலகம் நோபல் பரிசு, Nobel Prize 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NtJfdh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment