Tuesday, October 9, 2018

ரஃபேல் முறைகேடு வழக்கு: இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட  பொது நல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. 

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி  வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, வழக்கறிஞர் வினீத் தாண்டா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Classic Right sidebar Rafale Deal, Rafale Scam, BJP, reliance இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OJMylp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment