ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு செய்தி வெளியட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் நீதிமன்ற விசரணைக்கு பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைக்கு பின் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தொடர்பாக எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதனை புலனாய்வு செய்த பின்னரே அது தொடர்பான கட்டுரையை நாங்கள் நக்கீரனில் வெளியிட்டோம். இதன் காரணமாகவே நான் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
மேலும் என் விடுதலைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்து கொண்டார். பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நம்பிக்கையை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிரூப்பித்துள்ளது மிகப் பெருமையாக உள்ளதாகாவும் அவர் கூறினார். மேலும் என்னுடைய விடுதலைக்காக கைதாகி உள்ள மதிமுக செயலாளர் வைகோவிற்கு நன்றி தெரிவிப்பதாக நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
Classic Right sidebar நக்கீரன் கோபல், பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர், Nakkeeran Gopal, TN Governor தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NwUsty
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment