3 வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையை கொன்ற தாய் மனநோயாளியா அல்லது வேரெதும் பிரச்சனையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி, இவருடைய கணவர் செந்தில்குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முத்துமாரி-செந்தில்குமார் தம்பதியினருக்கு விசாகா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு முத்துமாரியும் தன்னுடைய மகள் விசாகாவும் அவருடைய இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென எழுந்த முத்துமாரி தன்னுடைய மகள் விசாகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தன் உடல் முழுவதும் கத்தியால் கீறிக் கொண்டுள்ளார், அதிகாலை தகவல் அறிந்த உறவினர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்த போது ,முத்துமாரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். முத்துமாரியை கைது செய்த போலீசார், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட குழந்தை விசாகாவின் உடல் , பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை கழுதறுத்து தாய் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் . மகளை கொலை செய்த தாய் மனநோயாளியா அல்லது வேரெதும் பிரச்சனையா என்று விசாரணை நடந்து வருகிறது
உறங்கி கொண்டிருந்த மூன்று வயது மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் , அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Classic Right sidebar மதுரை, குழந்தையை கொன்ற தாய், madurai தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2EavlgG
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment