Thursday, September 27, 2018

IPL போராட்ட வழக்கு - கருணாசுக்கு வரும் 4ம் தேதி வரை காவல்..!

ஐ.பி.எல். போராட்ட வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசை, வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.பி.எல். போராட்டத்தின் போது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது ஆகிய மேலும் 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். 

அப்போது,கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில், கொலை முயற்சி வழக்கினை மட்டும் நீதிபதி கோகுல்நாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஐ.பி.எல். போராட்ட வழக்கில், கருணாசை வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 இதனிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரிய கருணாசின் மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

 

Classic Right sidebar கருணாஸ், எம் எல் ஏ கருணாஸ், ஐபிஎல் போராட்ட வழக்கு,  Karunas, MLA Karuanas, IPL Protest Case அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DB9miW
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment