Thursday, September 27, 2018

நெல்லையில் தமிழிசை காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம்

செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழிசை செளந்தரராஜனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஏற்பட்ட கலவரத்தின் போது பாஜக நிர்வாகிகள் கைது செய்யபட்டதை கண்டித்து செங்கோட்டையில் தடையை மீறி பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யபட்டது.

அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துகுடி வந்த அவருடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா பேச்சு வார்த்தை நட்த்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்து பல நாட்கள் ஆன பின்பு பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்படுவதை  நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

Classic Right sidebar தமிழிசை, பாஜக, நெல்லை, tamilisai, BJP அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYau1m
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment