Thursday, September 27, 2018

சட்டப்பேரவை கலைக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறை அமல்... அதிரடி அறிவிப்பு

சட்டப்பேரவை கலைக்கப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இனி அமலுக்கு வரும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே நடைமுறைக்கும் வரும், நடத்தை விதிமுறைகளில் தேர்தல் ஆணையம் திருத்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட மாநிலங்களில், முதலமைச்சர் எந்தவொரு புதிய திட்டத்தையும் அறவிக்கக்கூடாது என்றும், இந்த விதிமுறை மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இனி அமலுக்கு வரும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தெலங்கானாவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, காபந்து முதலமைச்சராக சந்திரசேகராவ் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Classic Right sidebar இந்திய தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை, Election Commission of India, Assembly இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NIL7Ea
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment