ப்ரோ கபடி லீக் தொடரில் இந்த முறை தமிழ் தலைவாஸ் அணியினர் சிறப்பாக செயல்படுவர் என அணியின் புதிய பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
12 அணிகள் பங்கேற்கும் 6வது புரோ கபடி லீக் தொடர் வரும் அக்டோபர் 7ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. சென்னை சுற்று ஆட்டங்கள் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான தமிழ் தலைவாஸ் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியினர் இந்த முறை சிறப்பாக விளையாடுவர் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தொடக்க சுற்று ஆட்டங்களில் சொந்த ஊரில் விளையாடுவது நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்த போட்டி தொடரில் சிறப்பான தொடக்கம் காணுவோம் எனவும் தெரிவித்தார்.
Classic Right sidebar தமிழ் தலைவாஸ், Tamil Thalaivas விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DI134C
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment