Thursday, September 27, 2018

தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகள் பறிமுதல்..!

சிலைகடத்தல் மன்னன் தீன தயாளனின் கூட்டாளியான, சென்னை தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து 60 சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, வீட்டின் சுவரில் ஆங்காங்கே இடிக்கப்பட்டது. இதில், 4 ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 60 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும், தொன்மையான கோயில்களின் தூண்கள் மற்றும் கற்சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Classic Right sidebar ரன்வீர் ஷா, சிலை கடத்தல், தீன தயாளன்,  Ranvir Shah, idol Smuggling, Statue Smuggling தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NKtcwQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment