Thursday, September 27, 2018

குட்கா முறைகேடு : கைது செய்யப்பட்ட அதிகாரி சிவக்குமாருக்கு 3 நாள் சிபிஐ காவல்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை 3 நாள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர், சீனிவாசராவ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்,  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவகுமாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து, வரும் 4ம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே, சிவக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி, சி.பி.ஐ. தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம், சிவக்குமாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

Classic Right sidebar Gutka Scam,  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சிவக்குமார், சிபிஐ, குட்கா முறைகேடு,   தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QeBBFE
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment